Home இலங்கை தமிழகத்தில் உள்ள அதிகளவான இலங்கை அகதிகள் நாடு திரும்ப உள்ளனர்:

தமிழகத்தில் உள்ள அதிகளவான இலங்கை அகதிகள் நாடு திரும்ப உள்ளனர்:

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழகத்தில் வாழ்ந்து வரும் அதிகளவான இலங்கை அகதிகள் நாடுகள் திரும்ப உள்ளதாக இந்தியாவிற்கான இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர் வடிவேல் கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். 1986 இலங்கை அகதிகள் இவ்வாறு தமிழகத்திலிருந்து இந்த ஆண்டில் நாடு திரும்பியுள்ளனர் எனவும்  மேலும் 4000 இலங்கை அகதிகள் நாடு திரும்ப திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தன்னார்வ அடிப்படையில் நாடு திரும்புவதற்கான திட்டமொன்றை ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் அடிப்படையில் தமிழக வாழ் இலங்கை அகதிகள் நாடு திரும்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பெரும் எண்ணிக்கையிலான இலங்கை அகதிகள் தமிழகத்தில் காணப்படும் முகாம்களில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More