Home இலங்கை மட்டக்களப்பு சவுக்கடியில் 33 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 27 ஆம் ஆண்டு நினைவுகூரல்

மட்டக்களப்பு சவுக்கடியில் 33 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 27 ஆம் ஆண்டு நினைவுகூரல்

by admin

மட்டக்களப்பு சவுக்கடி கிராமத்தில் 33 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று   மாலை நினைவுகூரப்பட்டுள்ளது . 1990ம் ஆண்டு  செப்ரம்பர் 20ம் திகதி    சவுக்கடி மற்றும் ஆறமுகத்தான் குடியிருப்பு கிராமங்களைச் சேர்ந்த 33 தமிழர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்று  27 ஆண்டுகள் கடந்த நிலையில் அவர்களது உறவினர்களினால் நினைவேந்தல் நிகழ்வு  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்களின் நினைவாக சவுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிந்து  மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.  அத்துடன்  கொல்லப்பட்டவர்களுக்காக  விசேட பிரார்த்தனை மற்றும் இரங்கல் கூட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.    நினைவேந்தல் நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் உறவுகளை இழந்த குடும்ப உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More