குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் ஐந்து மாகாணங்களில் கடுமையான மழை பெய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடமேல், மேல், சபரகமுவ, மத்திய மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் கடுமையான மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் மேல் மழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளில் மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment