Home இந்தியா இலங்கையினால் விடுவிக்கப்பட்ட ஆறு படகுகள் இராமேசுவரம் சென்றடைந்துள்ளன.

இலங்கையினால் விடுவிக்கப்பட்ட ஆறு படகுகள் இராமேசுவரம் சென்றடைந்துள்ளன.

by admin

இலங்கையினால் முதல் கட்டமாக விடுவிக்கப்பட்ட ஆறு படகுகள்,  நேற்றையதினம்  இராமேசுவரம் சென்றடைந்துள்ளன.     விடுவிக்கப்பட்ட 42 படகுகளில், முதல் கட்டமாக இராமேசுவரம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த ஏழு படகுகளை மீட்பதற்காக  கடந்த  செப்டம்பர் 27ம் திகதி   53 மீனவர்கள் இலங்கை வந்திருந்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால்,  7 படகுகளையும் கயிறு கட்டி இராமேசுவரம் பகுதிக்கு இழுத்துச் சேன்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 180க்கும் மேற்பட்ட படகுகள், இலங்கை துறைமுகங்களில் இரண்டு ஆண்டுகளாக பராமரிப்பின்றி கடலில் மூழ்கிக் கிடக்கின்றன எனவும் இதனால், மீண்டும் இந்தப் படகுகளை இயக்க வேண்டுமென்றால், குறைந்தபட்சம்   5 இலட்சம் முதல்   8 இலட்சம் இந்திய ரூபா வரை செலவாகும் என  மீனவ சங்கத் தலைவர்கள்  தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More