Home இலங்கை இணைப்பு 2 – கடற்படை படகு மோதி மீனவர் ஒருவர் உயிரிழப்பு – காரைநகர் கடற்பரப்பில் சம்பவம்

இணைப்பு 2 – கடற்படை படகு மோதி மீனவர் ஒருவர் உயிரிழப்பு – காரைநகர் கடற்பரப்பில் சம்பவம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினரின் அதிவேக படகு , மீனவ படகை மோதி விபத்துக்கு உள்ளானதில் மீனவர் ஒருவர் உயிரிழந்து உள்ளதுடன் , மற்றுமொரு மீனவர் படுகாயமடைந்துள்ளார். காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியை சேர்ந்த கணபதிப்பிள்ளை கேதிஸ்வரன் (வயது 42) எனும் மீனவரே உயிரிழந்து உள்ளார். அதே இடத்தை சேர்ந்த தவராசா சத்தியராஜ் (வயது 26) எனும் மீனவரே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் , மீனவ சங்க தலைவர் கந்தசுவாமி தெரிவிக்கையில் ,
நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் தொலைபேசி அழைப்பு ஒன்று எனக்கு வந்திருந்தது. அதில் , திருகோணமலை கடற்படையின் அதிவேக படகு ,மீனவர் ஒருவரின் படகுடன் மோதி விபத்துக்கு உள்ளனதில் , மீனவர் ஒருவர் உய்ரிழந்து விட்டதாகவும் , மற்றுமொரு காப்பற்றப்பட்டு சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்க ப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதனை அடுத்து நாம் காரைநகர் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள கடற்படை முகாமுக்கு சென்று விசாரித்த போது , படகு விபத்துக்கு உள்ளனாதகவும் , படகும் இயந்திரமும் தம் வசம் உள்ளது எனவும் , வலையை காணவில்லை எனவும் , விபத்து சம்பவத்துடன் தொடர்புடைய திருகோணமலை கடற்படை முகாமை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் , மீனவர்கள் தெரிவிக்கையில் , விபத்துக்குள்ளான படகில் இருந்த இரு மீனவர்களும் வலையினை வீசி விட்டு சமிஞ்சை விளக்கை ஒளிரவிட்ட பின்னர் ஓய்வெடுத்துக்கொண்டு இருந்தவேளை அதிவேகமாக வந்த கடற்படை படகு மோதியதாக தெரிவித்தனர்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More