Home உலகம் இணைப்பு2 – ஸ்பெயினில் இருந்து காட்டாலன் மாகாணத்தை பிரிக்கும் தனிநாட்டுக் கோரிக்கைக்கு 90 சதவீத மக்கள் ஆதரவு

இணைப்பு2 – ஸ்பெயினில் இருந்து காட்டாலன் மாகாணத்தை பிரிக்கும் தனிநாட்டுக் கோரிக்கைக்கு 90 சதவீத மக்கள் ஆதரவு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஸ்பெயினில் இருந்து காட்டாலன்  மாகாணத்தை பிரித்து தனி நாடாக அங்கீகரிக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பில் தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவாக 90 சதவீத மக்கள் ஆதரவு  தெரிவித்துள்ளனர்.

அரசின் கடும் எதிர்ப்பு வன்முறைகளுக்கு மத்தியில் வாக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டது. மொத்தம் 42.3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அதில், 90 சதவீதம் மக்கள் சுதந்திர நாடு வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்து வாக்களித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு கடந்த 5 ஆண்டுகளாக தனி நாடு கோரிக்கைகள் வலுத்துள்ள நிலையில், இதுதொடர்பாக நேற்று பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஸ்பெயினில் இருந்து பிரிந்து தனி நாடாக வேண்டுமா அல்லது ஸ்பெயினுடன் இணைந்தே இருக்கலாமா என்பது பற்றி பொதுமக்களின் கருத்தறியும் வகையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ஸ்பெயின் அரசும், அரசியலமைப்பு நீதிமன்றமும் இதற்கு அனுமதிக்காததால், வாக்கெடுப்பை முறியடிக்க காவல்துறையினர்  கடுமையான நடவடிக்கைகளை எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனி நாடு கேட்கும் உரிமையை காட்டாலன்   வென்றெடுத்திருப்பதாகவும், சுதந்திர பிரகடனத்துக்கான கதவு திறக்கப்பட்டிருப்பதாகவும் காட்டாலன்   தலைவர் கார்லஸ் பூகிடமான்ட் தெரிவித்தார்.

Protesters shout slogans and wave Esteladas (Catalan separatist flags) as they gather outside the High Court of Justice of Catalonia in Barcelona, Spain, September 21, 2017. REUTERS/Susana Vera

காவல்துறையினரின் தடைகளை மீறி  ஸ்பெய்னின் கட்டாலான் வாக்கெடுப்பு ஆரம்பம்

Oct 1, 2017 @ 07:4

 
காவல்துறையினரின் தடைகளை மீறி ஸ்பெய்னின் கட்டாலான் பிராந்தியத்தில் சுதந்திரப் பிரகடனத்திற்கான வாக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வாக்கெடுப்பு நடத்தப்படுவதனை தடுத்து நிறுத்த காவல்துறையினர் கடும் முயற்சி எடுத்து வரும் நிலையில், மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

நாட்டின் அரசியல் சாசனத்திற்கு விரோதமான முறையில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவதாகவும் இது சட்டவிரோதமானது எனவும் ஸ்பெய்ன் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஸ்பெய்னின் செல்வச் செழிப்பு மிக்க பிராந்தியமாக கட்டாலான் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. பிராந்திய மக்கள் சுதந்திரப் பிரகடனமொன்றை மேற்கொண்டு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

வாக்கெடுப்பு நடத்தப்படும் இடங்களுக்கு காவல்துறையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், வாக்குப்; பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட உள்ளதாகவும் ஸ்பெய்ன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வாக்கெடுப்பு நிலையங்களை திறக்க அனுமதிக்க முடியாது எனவும் மக்கள் வாக்களிக்கக் கூடாது எனவும் காவல்துறையினர் அறிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spanish Civil Guard officers break through a door at a polling station for the banned independence referendum where Catalan President Carles Puigdemont was supposed to vote in Sant Julia de Ramis, Spain October 1, 2017. REUTERS/Juan Medina TPX IMAGES OF THE DAY – RC1A3B50BDF0

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More