Home இலங்கை உயிரிழந்தவரின் உடலை இலங்கை கொண்டுவர பணம் கோரப்படவில்லை :

உயிரிழந்தவரின் உடலை இலங்கை கொண்டுவர பணம் கோரப்படவில்லை :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் மனுஸ் தீவில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் அவரின் உடலை இலங்கைக்கு அனுப்புதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம்  பணம் கோரியதாக  தெரிவிக்கப்படும் செய்திகளுக்கு    இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம் கோரி சென்ற இலங்கைத் தமிழரான  ரஜீவ் ராஜேந்திரன்  என்பவரே இவ்வாறு கடந்த திங்கட்கிழமை  சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இவரது உடலை   இலங்கைக்குக் கொண்டு வருவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் பணம் கோரப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில்  அவுஸ்திரேலிய தூதரகம் இவ்வாறு மறுப்பு தெரிவித்துள்ளது.

இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் மனுஸ்தீவில் சடலமாக மீட்பு

Oct 2, 2017 @ 03:49

 

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் மனுஸ் தீவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம் கோரி சென்ற இலங்கைத் தமிழர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்பட்டுள்ளார். இந்த புகலிடக் கோரிக்கையாளர் ஏற்கனவே ஒரு தடவை தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த புகலிடக் கோரிக்கையாளர் உள ரீதியாக பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த புகலிடக் கோரிக்கையாளர் மரணமடைந்துள்ளதாக பபுவா நியூகினி காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More