Home இலங்கை புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் நிரபராதிக்கு தொடர் விளக்கமறியல்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் நிரபராதிக்கு தொடர் விளக்கமறியல்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் நிரபராதி என தீர்ப்பயத்தால் விடுவிக்கப்பட்ட நபர் , குறித்த வழக்கின் சாட்சியத்தினை அச்சுறுத்திய வழக்கில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளார்.

மாணவி கொலை வழக்கு விசாரணைகள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வந்த காலப்பகுதியில் வழக்கின் முதலாவது சந்தேக நபரான பூபாலசிங்கம் இந்திரகுமார் என்பவர் தன்னை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கோபி எனும் பொலிஸ் உத்தியோகஸ்தர் காழ்புணர்வு காரணமாகவே இந்த வழக்கில் கைது செய்தார் எனவும் , இந்த வழக்கில் இருந்து வெளியே வந்தால் கோபியை வெட்டுவேன் என நீதிமன்ற வாளகத்தில் வைத்து பகிரங்கமாக கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

அது தொடர்பில் சாட்சியங்களை அச்சுறுத்தியமை எனும் குற்ற சாட்டில் ஊர்காவற்துறை போலீசார் நீதிமன்றில் பிறிதொரு வழக்கை இந்திரகுமாருக்கு எதிராக தாக்கல் செய்தனர்.  குறித்த வழக்கு விசாரணை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் நடைபெற்றது.

அதன் போது , குறித்த நபருக்கு எதிராக நீதிமன்றில் தாக்கல் செய்யபப்ட்டு உள்ள முதல் அறிக்கையில் , மாணவி கொலை வழக்கின் சாட்சியம் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதேவேளை மாணவி கொலை வழக்கில் இவர் நிரபராதி என தீர்ப்பயத்தால் (ரயலட்பார்) விடுவிக்கபப்ட்டு உள்ளார். இந்நிலையில் , சட்டமா அதிபரினால் தீர்பாயத்திற்கு (ரயலட்பார்) தாக்கல் செய்யபப்ட்ட குற்ற பகிர்வு பத்திரத்தில் , கோபி எனும் பொலிஸ் உத்தியோகஸ்தர் சாட்சியாக உள்ளாரா ? இல்லையா ? என்பதனை இந்த மன்று கவனத்தில் எடுக்க வேண்டிய தேவை உள்ளது.

அதனை அறிந்து கொண்டால் மாத்திரமே , குறித்த நபருக்கு எதிராக சாட்சியங்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழா , அல்லது குற்றவியல் சட்டத்தின் கீழா வழக்கு நடத்த முடியும் எனும் தீர்மானத்திற்கு வர முடியும்.

ஆகவே மாணவி கொலை வழக்கின் அத்தாட்சி படுத்தப்பட்ட குற்றபகிர்வு பத்திரத்தினை யாழ்.மேல் நீதிமன்ற பதிவாளரிடம் இருந்து பெற்றுக்கொள்ளுமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதிவாளருக்கு பணிக்கிறேன் என நீதவான் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More