Home இலங்கை தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண ஒத்துழைக்குமாறு பிரதமர் பாராளுமன்றிடம் கோரிக்கை

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண ஒத்துழைக்குமாறு பிரதமர் பாராளுமன்றிடம் கோரிக்கை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண ஒத்துழைக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு நடைபெற்ற விசேட பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்ற பேர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகத்தை நிலைநாட்டும் நோக்கில் யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது எனவும், தேசிய இனப்பிரச்சினைக்கு அது தீர்வாக அமையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க  வேண்டும் என்பதிலேயே ஜனாதிபதியும் ஆர்வம் காட்டி வருகின்றார் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More