Home இந்தியா தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவியேற்பு

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவியேற்பு

by admin


தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் இன்று பதவி ஏற்றுள்ளார்.     சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை 9.30 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கலந்து கொண்டு பன்வாரிலால் புரோகித்துக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இவ்விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால்   தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்,  ; உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் நாட்டு தூதரக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

மகாராஷ்டிர மாநில ஆளனரான    வித்யாசாகர் ராவ் தமிழகத்துக்கு பொறுப்பு ஆளுனராக  நியமிக்கப்பட்ட நிலையில்; தமிழகத்துக்கு முழு நேர ஆளுனரை  நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தநிலையில் அசாம் மாநில ஆளனராக செயற்பட்டு வந்த   பன்வாரிலால் புரோஹித்தை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தமிழகத்தின் புதிய ஆளுனராக கடந்த 30ம்திகதி நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More