Home இலங்கை தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை

by admin



தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடக்கு மாகாண சபை கோரிக்கை விடுத்துள்ளது. வடக்கு மாகாண சபை இன்று    107 ஆவது அமர்விற்காக  கூடிய வேளையிலேயே இவ்வாறு கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தங்களளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ச்சியான  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே  அவர்களது வழக்குகளை வேறு இடங்களுக்கு மாற்றுவதனைத் தவிர்த்து அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென அவைத் தலைவர் சிவஞானம் விசேட பிரேரணையைக் முன்வைத்தார்.  இதனைத் தொடர்ந்து  ஏகமனதாக  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நிறைவேற்றப்பட்ட குறித்த பீரெரணையானது  ஐனாதிபதி பிரதமர் மற்றும் சிறைச்சாலை அமைச்சர் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கவும் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More