Home இலங்கை ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானங்களை மீறி முக்கொம்பன் வழியாக மணல் கொண்டு செல்லப்படுகிறது.

ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானங்களை மீறி முக்கொம்பன் வழியாக மணல் கொண்டு செல்லப்படுகிறது.

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானங்கள் மீறி முக்கொம்பன் வழியாக யாழ்ப்பாணத்திற்கு மணல் கொண்டு செல்லப்படுவதாக முக்கொம்பன் மக்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கொம்பன் கிராமத்திலருந்து பத்தாங்கட்டை வரை கொங்கிறீட் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக நாள்தோறும் இருபதிற்கு மேற்பட்ட மணல் டிப்பர்கள் பயணிப்பதன் காரணமாக கொங்கிறீட் வீதி சேதமடைவதாக பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவில் இணைத்தலைவர்களிடமும் அதிகாரிகளிடமும் கிராம மக்கள் சார்பாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போது  அவர்கள் டிப்பர்கள் இனி மணலுடன் பயணிக்காது என உறுதிமொழிகள்; வழங்கியிருந்தனர்.

ஆனால்  ஓராண்டு கடந்தும் தற்போதும் மணல் டிப்பர்கள் எமது கிராமம் வழியாகவே பயணிக்கின்றன எனவும் இதனால்  அக்கராயனுக்கும் தமது கிராமத்திற்கும் இடையிலான நான்கு கிலோமீற்றர் வீதி பெருங் குன்றுங்குழியுமாக மாறியுள்ள நிலையில் குறித்த கொங்கிறீட் பாதையாவது காப்பாற்ற வேண்டிய தேவை கிராம மக்களாகிய தமக்கு ஏற்பட்டுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

களவாக மணல் கொண்டு செல்வதற்கே தமது வீதி பயன்படுத்தப்படுகின்றது என்பது தொடர்பாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளருக்கும் பூநகரி பிரதேச செயலாளருக்கும் தகவல்கள் வழங்கப்பட்டும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குடமுருட்டி, கண்ணகைபுரம், அக்கராயன் ஆற்றுப் பகுதிகளில் களவாக அகழப்படும் மணலே எமது வீதி வழியாக கொண்டு செல்லப்படுகின்றது. இதற்கு அக்கராயன், பூநகரி ஆகிய பொலிசாரின்  ஆதரவும் காணப்படுவதாக பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே கிராம மக்களாகிய நாம் தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என முக்கொம்பன் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More