Home இலங்கை இலங்கை இந்திய மீனவர்கள் விவகாரம் தொடர்பான மூன்றாவது சுற்றுப்பேச்சுவார்த்தை நாளை

இலங்கை இந்திய மீனவர்கள் விவகாரம் தொடர்பான மூன்றாவது சுற்றுப்பேச்சுவார்த்தை நாளை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கை இந்திய மீனவர்கள் விவகாரம் தொடர்பான மூன்றாவது சுற்றுப்பேச்சுவார்த்தை நாளை புதுடில்லியில் நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தைகளில் இலங்கையின் சார்பில் கடற்றொழில் மற்றும் நீர்வளங்கள்அபிவிருத்தி அமைச்சர் மகிந்தஅரவீர கலந்துகொள்கின்றார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது இந்திய மீனவர்களின்  இழுவைபடகுகளின் ஊருடுவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படும் என அதிகாரிகள் தெரிவி;த்துள்ளனர். ஏற்கனவே இடம்பெற்ற இருசுற்றுப்பேச்சுவார்த்தைகளின்  பயனாக இந்திய மீனவர்களின் ஊருடுவலை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு சாதகமான நடவடிக்கைகளை  இந்திய மத்திய அரசு எடுத்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை கடந்த 35 வருடங்களாக நீடிக்கும் இந்த பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்காக நல்லாட்சி அரசாங்கம் பல சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More