Home இலங்கை வடக்கில் ஓர் சட்டமும் தெற்கில் மற்றுமொரு சட்டமும் அமுல்படுத்தப்படுகின்றது – மஹிந்த

வடக்கில் ஓர் சட்டமும் தெற்கில் மற்றுமொரு சட்டமும் அமுல்படுத்தப்படுகின்றது – மஹிந்த

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடக்கில் ஓர் சட்டமும் தெற்கில் மற்றுமொரு சட்டமும் அமுல்படுத்தப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வடக்கில் தற்போது தனியான சட்டமே அமுல்படுத்தப்பட்டு வருகின்றது எனவும், வடக்கின் சட்டம் வடக்கிற்கு தேவையான வகையில் அமுல்படுத்தப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தேவைகளை கருத்திற் கொண்டு, வடக்கில் எதனைச் செய்தாலும் அதனை அரசாங்கம் வேடிக்கை பார்த்து வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார். இதனைத்தான் சுதந்திரம் என்று கூறுகின்றார்கள் எனவும்  அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுகின்றனர் எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை போராட்டத்தில் பங்கேற்ற முஸ்லிம் சிறுவர்கள், தாய்மார் இன்று சிறையில் வாடுகின்றனர் எனவும் இவை பாரிய பாவச் செயலாகும் எனவும் மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினரும் புதல்வருமான நாமல் ராஜபக்ஸவை தங்காலை சிறையில் சென்று பார்வையிட்டு திரும்பிய போது அவர்  இதனைத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More