Home இந்தியா இந்து – முஸ்லிம் காதல் திருமணம் ஏற்புடையதே: கேரள மேல்நீதிமன்றம் தீர்ப்பு..

இந்து – முஸ்லிம் காதல் திருமணம் ஏற்புடையதே: கேரள மேல்நீதிமன்றம் தீர்ப்பு..

by editortamil

கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த இந்து மத இளம்பெணும் – முஸ்லிம் வாலிபரும் செய்துகொண்ட திருமணம் செல்லும் என கேரள மேல்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

அப்பெண்ணின் பெற்றோரின் முறைப்பாட்டை அடுத்து அரியானா மாநிலத்தில் இருந்த அவர்கள் இருவரையும், பொலீசார் கைது செய்து கேரளாவுக்கு கொண்டு சென்றதுடன் அப்பெண்ணை பெற்றோருடன் செல்ல கீழ் நீதிமன்றம் அனுமதித்திருந்தது.மகளின் மனதை மாற்றுவதற்காக, அவரை ஒரு யோகா மையத்தில் பெற்றோர் சேர்த்திருந்தனர்.

முஸ்லிம் வாலிபர் தாக்கல் செய்த ‘ஹேபியஸ் கார்பஸ்’ மனுவின்பேரில், ஒரு தனி நீதிபதி முன்பு முன்னிலைப்படுத்தப்பட்ட அப்பெண், பெற்றோருடன் செல்வதாக கூறினார். ஆனால், 4 நாட்களில் அவர் மீண்டும் மனம் மாறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வி.சிதம்பரேஷ், சதீஷ் நினான் ஆகியோர் அடங்கிய கேரள மேல்நீதிமன்ற அமர்வு, இவர்களின் திருமணம் செல்லும் என நேற்று தீர்ப்பு அளித்தது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது, தனது முடிவில் உறுதியாக நின்ற பெண்ணின் துணிச்சலை பாராட்டுகிறோம். திசை திருப்பும் மனுக்களால் நீதியை சீர்குலைக்க முயன்ற பெற்றோருக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறோம். ஒருவர், தான் விரும்பிய மதத்தை சுதந்திரமாக பின்பற்ற அரசியல் சட்டம் உரிமை வழங்கி இருக்கிறது. அந்த உரிமையை யாராலும் பறிக்க முடியாது.

எனவே, இந்த திருமணம் செல்லும். திருமணம், பதிவு செய்யப்பட்டுள்ளது. வெவ்வேறு மதத்தினர் திருமணம் செய்து கொள்ளும்போதெல்லாம், அதற்கு மதச்சாயம் பூசி, மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிப்பது வேதனை அளிக்கிறது. எல்லா மதமாற்ற திருமணங்களையும் தவறாக பார்க்க தேவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More