Home இலங்கை வடக்குக்கான மாற்றுவலுவுள்ளோருக்கான தொழிற்பயிற்சி நிலையம் கிளிநொச்சியில்

வடக்குக்கான மாற்றுவலுவுள்ளோருக்கான தொழிற்பயிற்சி நிலையம் கிளிநொச்சியில்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்க மாகாணத்திற்கான மாற்றுவலுவுள்ளோருக்கான தொழிற்பயிற்சி நிலையத்தினை  கிளிநொச்சியில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று ( 20.10.2017 )  நடைபெற்றது.

சமூக சேவைகள். நலன்பரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சமூக சேவைகள் திணைக்களத்தினால் வட மாகாணத்துக்கான மாற்றுவலுவுள்ளோருக்கான அமைக்கப்படவுள்ள இப்பயிற்சி நிலைய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர்  சி.சத்தியசீலன் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட சமூக சேவைகள். நலன்பரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சின் மேலதிக செயலாளரும் சமூக சேவைகள் திணைக்களத்தின் பதில் பணிப்பாளருமாகிய  பிரதீப் ஜசரட்ண  இப்பயிற்சி நிலையத்துக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.

80 மில்லியன் ருபா செலவில் நிர்மாணிக்கப்படும் இப்பயிற்சி நிலையத்தில் 2018 யூலை மாதம் பயிற்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது எனவும் இத்தொழிற்பயிற்சியில் 15 வயதிலிருந்து 38 வயதுவரையுள்ள மாற்றுவலுவுள்ளோருக்கு தொழிற்பயிற்சி வழங்கப்படும்.

அத்துடன் இப்பயிற்சியின் போது அவர்களுக்கான உணவு உடை தங்குமிட வசதி மற்றும் ஊக்குவிப்பு தொகை என்பன வழங்கப்படும் என சமூக சேவைகள் என நலன்பரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் திரு பிரதீப் ஜசரட்ண  தனது உரையில் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More