Home இலங்கை அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்துப்போராட்டம்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்துப்போராட்டம்.

by admin


குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கையெழுத்துப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

 யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றுயத்தின் ஏற்பாட்டில் பல்கலைக் கழகத்தில் இன்று  ஆரம்பிக்கப்பட்டுள்ள இக் கையெழுத்துப் போராட்டம் வடக்கு மாகாணம் முழுவமும் மாணவர்களால் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமை இன்றைய தினம்  யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் மாணவர்களினால் கையெழுத்துக்கள் பெறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
 அதே போன்று கிழக்கு மாகாணத்திலும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக மாணவர்களினால் இக் கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கைதிகளிற்கு ஆதரவாக பல்கலைக்கழ மாணவர்கள் முன்னெடுத்துள்ள இப் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் மாணவர் ஒன்றியம் கேட்டுள்ளது.

மேலும் இக்  கையெழுத்து போராட்டத்தில் பெறப்படும் கையெழுத்துக்களை மனிதஉரிமை ஆணைக்குழுவிற்கும் , ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவிற்கும் அனுப்ப  உள்ளதாகவும்  இந்த  கையெழுத்து போராட்டத்திற்கு       அனைத்து மக்களும் ஆதரவை வழங்க வேண்டுமென  மாணவர் ஒன்றிய  தலைவர்  கிருஷ்ன மேனன்  கேட்டுக்கொண்டார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More