Home விளையாட்டு இலங்கை அணியை பாகிஸ்தான் அணி வைற்வோஷ் செய்துள்ளது

இலங்கை அணியை பாகிஸ்தான் அணி வைற்வோஷ் செய்துள்ளது

by admin


இலங்கைக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.  இன்று ஐக்கிய அரபு ராச்சியத்தின் சார்ஜாவில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதயைடுத்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 26.2 ஓவர்களுக்கு   103 ஓட்டங்களை மட்டுமே பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தனர்.  இதனையடுத்து, 104 ஓட்டங்கள்  எனற் வெற்றி இலக்குடன்    களமிறங்கிய பாகிஸ்தான் அணி  20.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரமே  இழந்து 105 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீ்ட்டியுள்ளது.

இதற்கமைய, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-0 என கைப்பற்றியுள்ளது.  32 வருடங்களின் பின்னர், இலங்கை அணியை பாகிஸ்தான்  வைற்வோஷ் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More