Home உலகம் பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக ஆட்களை கடத்தும் 11 பேர் கைது

பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக ஆட்களை கடத்தும் 11 பேர் கைது

by admin

 


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிரித்தானியாவிற்குள் ஆட்களை சட்டவிரோதமாக கடத்துவதில் ஈடுபட்ட 11 பேரை குடிவரவு துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். சர்வதேச அளவில் இடம்பெற்ற விசாரணைகளின் ஓரு பகுதியாகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். லண்டன் பேர்மிங்காம் மற்றும் கேட்ஸ்ஹெட் பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாகனங்களிற்குள் இரகசியமாக மறைத்து வைத்து ஆட்களை கடத்துவதில் ஈடுபட்டுவந்த நபர்களையே அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். ஹலிபக்ஸ் என பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையில் உள்துறை அமைச்சை சேர்ந்த 200 அதிகாரிகள் ஈடுபட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் உட்பட ஆசிய நாடுகளைசேர்ந்தவர்களையே இவர்கள் பிரித்தானியாவிற்குள்  கொண்டுவந்துள்ளனர். விசேடமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களை பயன்படுத்தியே இவர்கள் ஆட்களை பிரித்தானியாவிற்குள் அழைத்துவந்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More