Home இலங்கை அனிக்காவுக்கு மரண அச்சுறுத்தல்கள் – விசாரணையில் அரசியல் தலையீடு இல்லை:-

அனிக்காவுக்கு மரண அச்சுறுத்தல்கள் – விசாரணையில் அரசியல் தலையீடு இல்லை:-

by editortamil

பிணைமுறி விவகாரத்தில் சாட்சியமளித்த அனிகா விஜேரத்னவுக்கு மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன என்பது தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவால் மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்கிறது எனவும், அவ்விடயத்தில் அரசியல் தலையீடு காணப்படவில்லை எனவும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

அனிதாவுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகள், அரசியல் தலையீட்டுக்கு உள்ளாகியுள்ளன எனவும், அதன் காரணமாக அவ்விசாரணைகளை நிறுத்துமாறு அல்லது அல்லது வேறு இடத்து மாற்றுமாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில் இது தொடர்பாக விளக்கமளித்துள்ள காவல்துறைப் பேச்சாளர் ருவன் குணசேகர, அவ்வாறான தலையீடுகள் எவையும் காணப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளித்திருந்த, கொள்ளுப்பிட்டியிலுள்ள சொகுசுத் தொடர் மாடி வீடொன்றின் உரிமையாளரான அனிகா விஜேசூரிய, குறித்த வீட்டை, மாதாந்தம் 1.45 மில்லியன் ரூபாய் செலவில், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் குடும்பம், வாடகைக்குப் பெற்றுக் கொண்டது எனத் தெரிவித்திருந்தார்.

அத்துடன் அதற்கான பணத்தை, பிணைமுறி விவகாரத்தில் சிக்கியுள்ள பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோஸியஸே செலுத்தினார் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான செய்தி வெளியானதும், குத்தகைக்கான ஒப்பந்தத்தை அழிக்குமாறு, அர்ஜுன் அலோஸியஸ் கோரியதுடன் ரவி கருணாநாயக்கவின் மனைவியும், மிரட்டினாரெனவும், அவர் சாட்சியமளித்திருந்தார். குறித்த அச்சுறுத்தல் காரணமாக அனிதாநாட்டை விட்டு வெளியேறியுள்ளார் எனவும், சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More