Home இந்தியா மவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர் தமிழகத்தில் சரண்!

மவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர் தமிழகத்தில் சரண்!

by editortamil

மவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த பகத்சிங் என்பவர் சேலம் காவல் துறையினரால் இன்று கைது செய்யப்பட்டார். தமிழக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த நிலையில், சேலம் காவல்துறை நிலையத்தில் சரணடைந்த இவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஊத்தங்கரை தாலுக்கா, சிங்காரப்பேட்டை அருகே அம்பேத்கார் நகரை சேர்ந்த பகத்சிங் கடந்த 2002இல் பொடா வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். பிணையில் வெளி வந்த பகத்சிங் கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்துள்ளதாக சேலம் காவல்துறை குறிப்பிடுகின்றது.

இந்நிலையில் தன்னை தமிழக காவல்துறையினர் என்கவுண்டரில் கொலை செய்யத் தீர்மானித்துள்ளமையை அறிந்த நிலையிலேயே சரணடைந்துள்ளதாக கூறியுள்ள பகத்சிங் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் முன்னிலையில் இன்று சரணடைந்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More