குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானிய பணியாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் துன்புறுத்தப்படுவதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து கவனம் செலுத்தவேண்டியது அவசியம் என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். பொதுச்சபையின் சபாநாயகர் ஜோன் பெர்கோவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற பணியாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் துன்புறுத்தப்படுவதாக வெளியாகியுள்ள அறிக்கைகள் குறித்து கவலையடைந்துள்ள பிரதமர் நாடாளுமன்ற பணியாளர்களை பாதுகாப்பது குறி;த்து தான் உறுதியாகவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற பணியாளர்களை பாதுகாப்பதற்கான தற்போதைய நடைமுறை பலமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment