Home இலங்கை இரா.சம்பந்தனுக்கு எதிராக சபாநாயகரிடம் முறைப்பாடு

இரா.சம்பந்தனுக்கு எதிராக சபாநாயகரிடம் முறைப்பாடு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தனது அடிப்படை உரிமையையும், பாராளுமன்ற வரப்பிரசாதத்தையும் மீறும் வகையில் செயற்பட்டுள்ளதாக சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசியல் சாசனம் தொடர்பிலான பாராளுமன்ற விவாதத்தில் கருத்து வெளியிட சந்தர்ப்பம் அளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவரிடம் விடுத்த கோரிக்கையை, சம்பந்தன் நிராகரித்தார் என அவர் தெரிவித்துள்ளார். விவாதத்தில் கருத்து வெளியிடுவது தொடர்பில் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டியது எனவும், நினைத்தவுடன் தமக்கு அனுமதி வழங்க முடியாது எனவும் சம்பந்தன், சிவசக்தி ஆனந்தனிடம் தெரிவித்துள்ளார். எனினும், சம்பந்தனின் இந்த நடவடிக்கைக்கு சிவசக்தி ஆனந்தன் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More