Home இலங்கை யுத்தத்தில் இடம்பெயர்ந்தவர்கள் சொந்த இடங்களில் குடியேற்றப்பட வேண்டும் – நோர்வே

யுத்தத்தில் இடம்பெயர்ந்தவர்கள் சொந்த இடங்களில் குடியேற்றப்பட வேண்டும் – நோர்வே

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யுத்தத்தில் இடம்பெயர்ந்தவர்கள் சொந்த இடங்களில் குடியேற்றப்பட வேண்டுமென நோர்வே அரசாங்கம் தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் தங்களது சொந்த இடங்களில் குடியேறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டுமென இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்பஜோர்ன் காஸ்ட்டாஸ்டெர் (  Thorbjørn Gaustadsæther )தெரிவித்துள்ளார்.

மக்கள் தங்களது வாழ்க்கையை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் மீள் குடியேறுவதற்கு உதவிகளை தொடர்ந்தும் வழங்க நோர்வே அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More