Home இலங்கை நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகள்: அமைச்சரவை அங்கீகாரம்

நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகள்: அமைச்சரவை அங்கீகாரம்

by admin

அபகமுவை, மஸ்கெலியா, நோர்வுட், நுவரெலியா, அக்கரபத்தனை, கொட்டகலை ஆகிய பிரதேச சபைகள் அமைக்கப்படுவதை இன்று அமைச்சரவை ஏகமனதாக அங்கீகரித்துள்ளது.  உள்ளாட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் இந்த பத்திரம் சமர்பிக்கப்பட்ட போது அமைச்சரவையில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோர்   ஆதரித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை முடிவின் பின் இதுபற்றி கருத்து கூறிய தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர்,   மனோ கணேசன்,

நுவரெலிய மாவட்ட புதிய பிரதேச சபை தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சற்றுமுன் அமைச்சரவை அங்கீகரித்தது. நமது நண்பர் உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு நன்றியை  தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

1987 முதல் கடந்த முப்பது வருடங்களாக கவனிப்பாரற்று இருந்த கனவுக்கோரிக்iயை     நனவாக்கி காட்டியுள்ளோம். தமிழ் முற்போக்கு கூட்டணியின் தொலைநோக்கு தேசிய பயணத்தில் ஒரு மைல் கல்லாக இது அமைகிறதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய பிரதேச சபைகள் பெரும் முயற்சியில், முதற்கட்டமாக இந்த சாதனை அமைந்துள்ளது எனவும் ஜனநாயக அடிப்படையில் போராடி, கிடைக்கும் தீர்வை நிராகரிக்காமல் வாங்கி ஏற்றுக்கொண்டு, அதன்மூலம் எம்மை ஸ்திரப்படுத்திக்கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் எனவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More