Home இலங்கை 2 மில்லியன் பெறுமதியான போலி நாணயத்தாள்களை அச்சிட்ட தம்பதியர் கைது :

2 மில்லியன் பெறுமதியான போலி நாணயத்தாள்களை அச்சிட்ட தம்பதியர் கைது :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
போலி நாணயத்தாள்களை அச்சிட்டு உடைமையில் வைத்திருந்த இளம் தம்பதியர் இன்று மாலை யாழ்ப்பாணம் காவல்துறையினரால்; கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 21 இலட்சத்துத்து 68 ஆயிரம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டதாகப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், அரியாலை – மணியந்தோட்டம் பகுதியிலுள்ள அவர்களுடைய வீட்டில் வைத்தே  அவர்கள் வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டனர்.

யாழ். கல்வியங்காடு பகுதியில்  குடும்பத்தலைவர் போலி நாணயத்தாள்களை தனது பணத்தேவைக்கு பயன்படுத்த சில மாதங்களுக்கு முன்னர் முற்பட்டிருந்தார். எனினும் அதனை கடை உரிமையாளர்  அறிந்துகொண்டு காவல்துறையினருக்கு தகவல் வழங்கியிருந்தார்.

அதனடிப்படையில் குடும்பத்தலைவரைக் கைது செய்ய முற்பட்ட போதும் அவர் தலைமறைவாகியிருந்தார். இந்த நிலையில் அவர் தொடர்பில் காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரது வீட்டுக்கு சென்று சோதனை நடத்தப்பட்டது.

அங்கு 5,000 ரூபா போலி நாணயத்தாள்கள் 400உம் 1,000 ரூபா போலி நாணயத்தாள்கள் 168உம் கைப்பற்றப்பட்டன.
அவற்றை அச்சிடப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பிறின்டர், ஸ்கானர் மற்றும் மடி கணினி என்பனவும் மீட்கப்பட்டன.

காவல்துறையினர் அங்கு சென்றவேளை குடும்பத்தலைவர் வீட்டில் இல்லாத்தனால் அவரது மனைவி முதலில் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து அவரது கணவர் இன்றிரவு கைது செய்யப்பட்டார்.

இருவரையும் நாளை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.
24 வயதுடைய இராசலிங்கம் லபீசன் அவருடைய மனைவியான  19 வயதுடைய கிருசாந்தி ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டவராவார்கள்  என்று யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More