Home இலங்கை வடக்கு முதல்வரின் நிதியில் உதவிப் பொருள்கள் வழங்கல்

வடக்கு முதல்வரின் நிதியில் உதவிப் பொருள்கள் வழங்கல்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாண முதலைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் பன்முகப்படுத்தப்பட்ட நன்கொடை நிதி ஒதுக்கீட்டில் 11 இலட்சத்து 54 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான உதவிப் பொருள்கள் பயனாளிகளுக்கு இன்று புதன்கிழமை வழங்கப்பட்டன.

மீனவர் ஓருவருக்கு 79 ஆயிரம் ரூபா பெறுமதியான கடற்றொழில் உபகரணங்கள், சுயதொழில் முயற்சியாளர் ஒருவருக்கு 73 ஆயிரம் ரூபா பெறுமதியான ஒலி பெருக்கி உபகரணங்கள், பல்கலைக்கழக மாணவருக்கு 2 இலட்சத்து 76 ஆயிரம் ரூபா பெறுமதியான மடிகணனிகள் , பாடசாலை மாணவர்கள் 18 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள், 8 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் 3 விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்கள் என்பனவே வட மாகாண முதலமைச்சரால் அவரது அலுவலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More