Home இலங்கை தன்னை கடலில் தள்ள கோரிய நளினுக்கு முதலமைச்சர் அழைப்பு.

தன்னை கடலில் தள்ள கோரிய நளினுக்கு முதலமைச்சர் அழைப்பு.

by admin


என்னை இனவாதி எனக் குறிப்பிடும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார என்னுடன் வந்து பேசுவாராயின் பலவற்றில் தெளிவடைந்து கொள்வார் என வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கிலுள்ள விக்னேஸ்வரன் போன்ற இனவாதிகளும், தெற்கிலுள்ள வீரவன்ச போன்ற இனவாதிகளும் இன்று ஒருமூலைக்கு முடங்கியுள்ளனர். இந்த நிலையில் வடக்கிலும், தெற்கிலும் மூலையில் ஒதுங்கியிருக்கும் இனவாதிகளை சேர்த்துக்கட்டி நடுக்கடலில் தள்ளவேண்டும்’ என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

அது தொடர்பில் இன்றைய தினம் புதன் கிழமை முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதிலளிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

‘இலங்கையில் எவை நடந்தவை. எதற்காக அவை நடந்தவை என்பவை தொடர்பில் நாம் கலந்தாலோசித்தால் எல்லாமே தெளிவாகும். அவர் என்னுடன் கலந்தாலோசித்தால் எனக்கு எதிராகக் குரல் கொடுக்கமாட்டார் ‘ என முதலமைச்சர் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More