Home இந்தியா சென்னையில் ஒன்பது நாட்களாகப் பெய்த பருவமழை ஓய்ந்தது

சென்னையில் ஒன்பது நாட்களாகப் பெய்த பருவமழை ஓய்ந்தது

by admin


தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கடந்த 9 நாட்களாக தொடர்ந்து பெய்துவந்த பருவமழை ஓய்ந்தது. இன்று அதிகாலை நேர மழை முடிவுக்கு வந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 9 நாட்களாக காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. இனிவரும் நாட்களில் மழையின் பாதிப்பு குறைவாக இருக்கும் என்றும் பருவ மழையின் சிறிய அளவான மழை வீழ்ச்சி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையின்போது எதிர்பார்க்கப்பட்டதைவிட 93 சதவீதம் அதிகமான  மழை சென்னையில்  பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் தமிழகம் முழுவதற்குமான மழை வீழ்ச்சி எதிர்பார்ததைவிடவும் 8 சதவீதம் குறைவாகவே மழை பெய்துள்ளது.
தொடர்ச்சியான மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டிருந்தது. இதேவேளை சென்னையின் சில இடங்களில் வெள்ளப் பாதிப்பும் ஏற்பட்டிருந்தது. தொடர்ச்சியான மழை வீழ்ச்சி காரணமாகவும் மழைக்கால விபத்துக்கள் காரணமாகவும் சில உயிரிழப்புக்களும் நிகழ்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இம்முறை வடகிழக்கு பருவமழையின்போது தமிழகம் முழுதும் எதிர்ப்பார்க்கப்பட்ட மழை அளவு 21 சதவீதம் என்றும் பெய்தது 19 சதவீதம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

கடந்த சில நாட்களில் எதிர்பார்க்கப்பட்டதை விட 93 சதவீதம் அதிக அளவில் மழை குறைவாக பெய்தாலும் நீர் நிலைகள் 20 சதவீதம் மாத்திரமே நிரம்பி உள்ளதாகவும். சென்னையின் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கி வெள்ளமாகி வீணாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More