Home இலங்கை வடமாகாண அபிவிருத்தி உத்தியோகஸ்தர் தரம் (III) நியமனம் இழுத்தடிப்பு – பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டு

வடமாகாண அபிவிருத்தி உத்தியோகஸ்தர் தரம் (III) நியமனம் இழுத்தடிப்பு – பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடமாகாண சபையினால் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் தரம் (III) க்கான நியமனங்கள் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  வடமாகாண சபையினால் கடந்த 29.07. 2017 ஆம் திகதி  அபிவிருத்தி உத்தியோகஸ்தர் தரம் (III)க்கான போட்டி பரீட்சை நாடத்தப்பட்டது.  பரீட்சை பெறுபேறுகள் 29.082017ஆம் திகதி வெளியிடப்பட்டது.

ஆனலும் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி இரண்டு மாதங்களை கடந்த நிலையிலும் இதுவரையில் பரீட்சையில் தெரிவானவர்களுக்கான நேர்முக தேர்வு நடைபெறவில்லை எனவும் , அதற்கான திகதிகள் அறிவிக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகின்றது.

அதனால் தாம் புள்ளிகளை பெற்று தெரிவான போதிலும் , தமக்கான நியமனத்திற்கான கால இழுத்தடிக்கப்படுவதனால் தாம் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து உள்ளோம் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More