Home இலங்கை அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டனர், என்கிறார் விஜயகலா:-

அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டனர், என்கிறார் விஜயகலா:-

by editortamil

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-


நல்லாட்சி அரசாங்கத்தால் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டனர். தற்போது சிறைகளில் உள்ளோர் குற்றம் சாட்டப்பட்டவர்களே என என மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழில்.உள்ள அவரது இல்லத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நல்லாட்சி அரசாங்கத்தால் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டனர். தற்போது சிறைகளில் தடுத்து வைக்கபப்ட்டு இருப்போர் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு உள்ளவர்கள்.

அவர்கள் தொடர்பில் நீதிமன்றங்களே முடிவெடுக்க முடியும். அது தொடர்பில் ஜனாதிபதியோ , பிரதமரோ நாங்களோ முடிவெடுக்க முடியாது. நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் மூலம் அவர்கள் குற்றவாளிகளா , நிரபராதிகளா என கண்டறியப்படும்.

அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் ஒரு தவறினை இலழைத்து உள்ளது. வவுனியா மேல் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கினை அனுராதபுர மேல் நீதிமன்றுக்கு மாற்றியமை முற்று முழுதாக பிழை. அதனை நாங்கள் மன்னிக்க மாட்டோம்.

வவுனியாவில் இருந்து அனுராதபுரத்திற்கு வழக்கினை மாறியமை ஊடாக இந்த அரசாங்கம் எமக்கு இன்னொரு விடயத்தை மறைமுகமாக கூறியுள்ளது. அதாவது வடக்கு கிழக்கை தமிழர்களுக்கு பிரித்து தந்துவிட்டார்கள் என்பதனை. அதனாலையே வவுனியாவில் நடந்த வழக்கை அனுராத புரத்திற்கு மாற்றி உள்ளார்கள் என நாங்கள் எண்ண வேண்டும். என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More