Home இலங்கை 500 கோடி ரூபா நட்டஈடு கோரி அவன்ட் கார்ட் நிறுவனம் வழக்குத் தாக்கல்

500 கோடி ரூபா நட்டஈடு கோரி அவன்ட் கார்ட் நிறுவனம் வழக்குத் தாக்கல்

by admin


குளோபல் தமிழ் செய்தியாளர்

500 கோடி ரூபா நட்டஈடு கோரி அவன்ட் கார்ட் நிறுவனம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. சர்வதேச கடற் பரப்பில் பயணம் செய்யும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கி வந்ததாகவும், அந்த பணிகளை கடற்படையினர் பலவந்தமாக தம்மிடமிருந்து அபகரித்துக் கொண்டதாகவும்  அவன்ட் கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் தமது நிறுவனத்திற்கு ஏற்பட்ட நட்டத்திற்காக கடற்படையினர் 500 கோடி ரூபா நட்டஈடு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளது.

அவன்ட் கார்ட் மரிடைம் நிறுவனம் இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது. சட்ட மா அதிபர், பாதுகாப்புப் படைகளின் பிரதானி, கடற்படையின் முன்னாள் தளபதி சின்னய்யா, தற்போதைய கடற்படைத் தளபதி அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More