Home இலங்கை வீதி போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற தவறும் சாரதிகள்

வீதி போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற தவறும் சாரதிகள்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வீதி போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற தவறும் பெரும்பாலான சாரதிகளினாலேயே பல விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வகை சாரதிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக விபத்துகளின்போது அவா்களை நம்பி வாகனங்களில் பயணிக்கின்றவா்களின் உயிர்களும் பலியாகின்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

அந்த வகையில் இன்று(16) கிளிநொச்சி மாவட்டச் செலயகம் முன்பாக புகையிரத கடவையில்  பகல் ஒரு மணிக்கு கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணிக்கும் புகையிரதம் வருகை தரும் நேரம்  புகையிரத கடவை சமிஞ்சை போடப்பட்ட  நிலையில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவா் அவசரத்தில் கடக்க முற்பட்டு இடைநடுவில் மாட்டிக்கொண்ட சம்பவம் இடம்பெற்றது.  பின்னர்  அவசர அவசரமாக ஒரு வழியாக  வீதியை விடடு விலகி கடவையை கடந்துசென்றார்.

இதன் போது புகையிரதம் புகையிரத நிலையத்தை அண்மித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More