Home இலங்கை உரிமைகளை பாதுகாக்கக் கோரி மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்:-

உரிமைகளை பாதுகாக்கக் கோரி மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்:-

by editortamil

மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். தமது உரிமைகளை பாதுகாக்கக் கோரியும் மீனவர்களின் தேவைகளை நிறைவேற்றுமாறு கோரியுமே மேற்படி போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச மீனவர் தினத்தையொட்டி, மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழிலாளர்கள் அமைப்புகள், மீனவர் அமைப்புகள், பொது அமைப்புகள் இணைந்து, இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மீனவர்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டுவருவதாகவும் அவர்களுக்கான உதவித் திட்டங்கள் மிகவும் குறைவான நிலையிலேயே கிடைப்பதாகவும் இந்த உதவித் திட்டங்களை, நல்லாட்சி அரசாங்கம் அதிகரிக்கவேண்டும் எனவும் இதன்போது மீனவர்களால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இயற்கை சீற்றம் மற்றும் வரட்சிக்காலம் போன்றவலற்றின் போது ஏற்படும் பாதிப்புகிள்ன போது தமக்கு எவ்வித நிவாரணங்களும் வழங்கப்படுதில்லையெனவும் மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வெளியிடங்களில் இருந்துவரும் மீனவர்கள் தமது கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடுவது தொடர்பில் இதுவரையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை, மட்டக்களப்பு மாவட்ட அரசார்பற்ற அமைப்புகளின் ஒன்றியமான இணையத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதனிடம் அவர்கள் ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கையளித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More