Home இலங்கை உழவு இயந்திரத்தால் மோதி நண்பனை கொன்ற நண்பன்

உழவு இயந்திரத்தால் மோதி நண்பனை கொன்ற நண்பன்

by admin

 

குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

யாழ். வடமராட்சி பகுதியில் உழவு இயந்திரத்தால் மோதி குடும்பஸ்தர் ஒருவரை அவரது நண்பர் கொலை செய்துள்ளார் என பருத்தித்துறை காவல்துறையினர்; தெரிவித்துள்ளனர்.   பருத்தித்துறை முதலாம் கட்டை பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான சிதம்பரப்பிள்ளை சிவபாலன் (வயது 48) என்பவரே அவ்வாறு கொலை செய்யப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ,

கொலையுண்ட நபர் பேக்கரி உரிமையாளராவார். அவர் தனது நண்பர்களுடன் இணைந்து இன்று சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் மது அருந்தி உள்ளார்.    போதை நிலையில் நண்பர்களுக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு உள்ளது.

அதன் பின்னர் கொலையுண்ட நபர் அங்கிருந்து சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து  அவருடன் முரண்பட்ட நண்பர் தனது உழவு இயந்திரத்தை எடுத்து சென்று , உழவு இயந்திரத்தால் மோதி அவரை கொலை செய்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட  காவல்துறையினர் அதேயிடத்தை சேர்ந்த 43 வயதுடைய உழவு இயந்திர சாரதியை கைது செய்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More