Home இலங்கை தமிழீழத்துடன் கொழும்பில் சிங்கள இளைஞர்கள்!

தமிழீழத்துடன் கொழும்பில் சிங்கள இளைஞர்கள்!

by editortamil


உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய கொழும்பிலிருந்து உந்துருளிப் பேரணி ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளது.  தமிழீழ வரைபடம் பொறிக்கப்பட்டும், சமஷ்டி ஆட்சி வேண்டாம் என்ற வாசகங்களை உள்ளடக்கித் தயாரிக்கப்பட்ட உடைகளை அணிந்தும், பிவித்துரு ஹெல உறுமய இந்தப் பேரணியை ஆரம்பித்துள்ளது. கொழும்பு கோட்டே புகையிரத நிலையத்திற்கு பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தலைமையிலான இளைஞர்கள் மத வழிபாட்டுடன் குறித்த பேரணியை ஆரம்பித்தனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த உதய கம்மன்பில, “சமஷ்டி ஆட்சி வந்தால் இந்த நாட்டிற்கு என்ன நடக்கும் என்பதன் விளைவுகளை விரிவாக அச்சிட்ட துண்டுப் பிரசுரங்களை மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக வழங்குகின்றோம். இந்த அரசாங்கம் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கிறது. இந்த அரசாங்கத்திலுள்ளவர்கள் அடுத்த பரம்பரையை பற்றி சிந்திப்பதில்லை. வடக்கில் வேறு நாடு என்ற உணர்வில் அவர்கள் இருப்பதால்தான் சர்வேஸ்வரன், விக்னேஸ்வரன் இவ்வாறு நடந்து கொள்கின்றனர்.  தேசியக் கொடியை நிராகரித்த வட.மாகாண கல்வியமைச்சர், புத்தர் சிலைகளை உடைக்கும் விக்னேஸ்வரன் ஆகியோர் குறைந்த அதிகாரத்தில் இவ்வாறு நடந்து கொள்கின்றவர்கள் அதிக அதிகாரம் வழங்கினால் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை ஜனாதிபதியும், பிரதமரும் தெளிவாக உணர்ந்துகொள்ள வேண்டும்” எனவே ”புதிய அரசியலமைப்பு தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அதற்கெதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும். என வலியுறுத்தி உள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More