Home இலங்கை காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடிய தந்தை உயிரிழப்பு

காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடிய தந்தை உயிரிழப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இராணுவத்தினரிடம் கையளித்த மகன் பற்றிய தகவல் இல்லாது மகனை தேடி வந்த தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியாவை சேர்ந்த அரியரட்ணம் (வயது 74) என்பவரே உயிரிழந்தவராவர். இரண்டு சிறு நீரகங்களும் முற்றாக பாதிப்படைந்த நிலையில் கடந்த 10 நாட்களாக வவுனியா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

இறுதி யுத்தம் நடைபெற்ற நாளில் ஓமந்தை இராணுவ சோதனை சாவடியில் வைத்து அவரது மகனை இராணுவத்தினரிடம் ஒப்படைத்துள்ளார். அதன் பின்னர் மகனைப்பற்றிய எந்த தகவலும் இல்லாத நிலையில் மகனை கடந்த எட்டு வருட கால பகுதியாக அவரும் அவருடைய மனைவியும் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரத போராட்டத்தில் சுழற்சி முறையில் ஈடுபட்டு வந்தார். அதேவேளை காணாமல் ஆக்கப்பட்ட அவர்களின் மகனின் இரணைப்பிள்ளைகளை இவர்களே வளர்த்து வந்தனர்.

இந்நிலையிலையே சுகவீனமுற்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். வடக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி வந்த ஐவர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More