Home இலங்கை சாவகச்சேரி நகர சபை தேர்தலில் போட்டியிட கட்டுப்பணத்தை முந்திக்கொண்டு செலுத்தியது ஈ.பி.டி.பி

சாவகச்சேரி நகர சபை தேர்தலில் போட்டியிட கட்டுப்பணத்தை முந்திக்கொண்டு செலுத்தியது ஈ.பி.டி.பி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முதல் கட்சியாக கட்டுப்பணத்தைச் செலுத்தியது. யாழ். மாவட்ட தேர்தல்கள் செயலகத்துக்கு இன்று முற்பகல் 11 மணிக்கு வருகைதந்த அந்தக் கட்சியின் யாழ்ப்பாண உதவி நிர்வாகச் செயலாளர் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் கட்டுப்பணத்தைச் செலுத்தினார்.

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கு கட்டுப்பணத்தை ஏற்கும் நாள் நேற்று தொடக்கம் டிசெம்பர் 13 ஆம் திகதிவரை என தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அறிவித்திருந்தது.  வடக்கில் சாவகச்சேரி நகர சபைக்கு மட்டுமே வேட்பு மனு கோரப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே அதில் போட்டியிடுவதற்கு ஈபிடிபி இன்று கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More