Home இலங்கை “பிரபாகரன் சிறந்த தலைமைத்துவ பண்புகளை கொண்டவர்- நேர்மை இருந்தது – நோக்கத்தை அடையும் உண்மை இருந்தது”

“பிரபாகரன் சிறந்த தலைமைத்துவ பண்புகளை கொண்டவர்- நேர்மை இருந்தது – நோக்கத்தை அடையும் உண்மை இருந்தது”

by admin

சிங்களத் தலைவர்களை விடவும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சிறந்த தலைவர் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான ஞானசார தேரர் என கூறியுள்ளார். இன்று (29.11.17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்   கருத்து வெளியிட்ட ஞானசார தேரர் , புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நேர்மை இருந்தது. அந்த நோக்கத்தை அடைவதற்கான உண்மைத்தன்மை இருந்தது எனவும்,  சிறந்த தலைமைத்துவ பண்புகளை கொண்டவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த ஞானசார தேரர், “ இலங்கையர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தாலும், இலங்கை இராணுவத்தில் இருந்தாலும், சிங்களவராக இருந்தாலும், தமிழ், முஸ்லிமாக இருந்தாலும் மக்களே என்பதை நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்கின்றோம். விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்தாலும் போராட்ட நோக்கம் சிறந்ததாக இருக்க வேண்டும். எனினும் விடுதலைப் புலிகளின் தலைவர் தெரிவுசெய்த வழிதான் பிழையானது. குறிப்பாக ஆயுதத்தை கையில் ஏந்தியது தவறு என்றே கூற வேண்டும் எனவும் குறிப்பிட்டு உள்ளார்.

வடக்கில் இருப்பவர்கள் இந்தியாவின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்லர். விடுதலைப் புலிகளின் போராட்டமும், ஜே.வி.பி போன்ற போராட்டத்தை ஒத்ததாகும். இந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களும் எமது மக்களே. எனினும் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதாக தெற்கு மக்களுக்கு கூறிவிட்டு வடக்கில் வேறு ஒன்றை செய்வதை ஏற்கமுடியாது. இதனூடாக இனங்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்படுகிறது. சாதாரண மக்கள் இதனை செய்ய மாட்டார்கள். இதனைத் தூண்டி ஏற்பாடு செய்கிறவர்களுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More