Home இலங்கை சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு பேர் பலி

சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு பேர் பலி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடுமையான காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன. மேலும் இந்த சம்பவங்களினால் ஐந்து பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

மடோல்சீகம குருவிகொல்ல வீதியில் பயணம் செய்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி மீது மரமொன்று வீழ்ந்ததில் சாரதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில்  மோட்டார் சைக்கிள் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் கிரிபத்கொட ஜயந்த சந்தியில் சிறிய லொறி ஒன்றின் மீது மரமொன்று வீழ்ந்து  சாரதி உள்ளிட்ட ஆறு பேர் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த இரண்டு பேர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More