குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியுள்ளார். தென்கொரியாவிற்கான பயணத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நாடு திரும்பியுள்ளார். நேற்றைய தினம் இரவு 11.15 அளவில் ஜனாதிபதி இவ்வாறு நாடு திரும்பியுள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி வந்தடைந்தார் என விமான நிலையத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஹொங்கொங்கிலிருந்து வந்த கதே பசுபிக் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்றின் மூலம் அவர் இவ்வாறு நாடு திரும்பியுள்ளார். இலங்கைக்கும் தென்கொரியாவிற்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளுக்கு நாற்பது ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வுகளுக்காக அவர் தென் கொரியாவிற்கு பயணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment