Home இலங்கை இருபது இந்திய மீனவர்கள் கைது

இருபது இந்திய மீனவர்கள் கைது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இருபது இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கைக் கடற்படையினரால் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்து மீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்கள் பயன்படுத்திய இரண்டு படகுகளையும் கடற்படையினர் மீட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More