Home உலகம் 200 ஆண்டுகளில் ஜப்பான் மன்னர் குடும்பத்தில் பதவி விலகும் முதல் மன்னர்..

200 ஆண்டுகளில் ஜப்பான் மன்னர் குடும்பத்தில் பதவி விலகும் முதல் மன்னர்..

by admin

எதிர்வரும் 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவியில் இருந்து ஓய்வு பெறுவார் என அநநாட்டு;பிரதமர் ஷின்சோ அபே நேற்றையதினம் அறிவித்துள்ளார்

தற்போதைய மன்னராக 83 வயதான அகிஹிட்டோ பதவி வகித்துவருகின்றார். வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மன்னருக்குரிய கடமைகளைச் சரிவர செய்ய முடியவில்லை. அதனால் பதவி விலக விரும்புகிறேன் என கடந்த வருடமே அகிஹிட்டோ அறிவித்திருந்தார்.

இந்நிலையில், வரும் 2019-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் திகதி மன்னர் அகிஹிட்டோ பதவி விலகுவார் என்று பிரதமர் ஷின்சோ அறிவித்துள்ளார்.

கடந்த 200 ஆண்டுகளில் ஜப்பான் மன்னர் குடும்பத்தில் இதுவரை யாரும் பதவி விலகியது இல்லை எனும் நிலையில் முதல் முறையாக அகிஹிட்டோ பதவி விலக முடிவெடுத்தமையினை தொடர்ந்து மன்னர் பதவி விலகுவதற்கு வகை செய்யும் வகையில் ஜப்பான் அரசு புதிதாக தீர்மானத்தைக் கொண்டு வந் நாடாளுமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டு அனுமதி பெறப்பட்டது.

அகிஹிட்டோ பதவி விலகிய பிறகு, அவருடைய மூத்த மகனான 53 வயதான நருஹிட்டோ அடுத்த மன்னராக பதவியேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More