Home இலங்கை 9 மாதங்களில் 334 இலங்கையர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளனர்:-

9 மாதங்களில் 334 இலங்கையர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளனர்:-

by admin


இந்த வருடத்தின் கடந்த 9 மாதங்களில் 334 இலங்கையர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்த புதிய அறிக்கையினை அமைச்சு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. உயரிழந்தவர்களில் 229 ஆண்களும்,105 பெண்களும் உள்ளடங்குவதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் 52 பேர் காணாமல் ​போய் உயிரிழந்துள்ளதாகவும் 22 பேர் தற்கொலை செய்துள்ளதாகவும், 9 பேர் தாக்குதல்கள் காரணமாகவும் ,247 பேர் சுகயீனமுற்று உயிரிழந்திருப்பதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களது இறப்பினை உறுதிப்படுத்தி அமைச்சின் இறப்பு உறுதிப்படுத்தும் பிரிவின் மூலம் காப்புறுதியினை வழங்குவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More