Home இந்தியா கேரளாவில் வரதட்சணை கேட்டு கொடுமை – 2 மகள்களை கொலை செய்து தாயும் தற்கொலை:-

கேரளாவில் வரதட்சணை கேட்டு கொடுமை – 2 மகள்களை கொலை செய்து தாயும் தற்கொலை:-

by admin

இந்தியாவின் கேரள மாநிலத்தில் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதால் இரண்டு மகள்களை கொலை செய்து ஆற்றில் வீசி விட்டு பெண் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளர்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தினைச் சேர்நத 37 வயதான கூலித்தொழிலாளி ஒருவரின் மனைவியான 33 வயதான பத்மாவதி என்பவரே 7 மற்றும் 5யதுடைய தனது மகள்களை கொலை செய்து தானும் தற்கொலை செய்துள்ளார் கடந்த சனிக்கிழமை இரவு குறித்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் நேற்றையதினம் ஆற்றிலிருந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

கணவரான ரதீஷ் வரதட்சணை கேட்டு அடிக்கடி பத்மாவதியை கொடுமைப்படுத்தி வந்ததாகவும் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் இரு மகள்களுடன் பத்மாவதி குளத்தில் குத்தித்து தற்கொலை செய்து கொண்டார் எனவும் பத்மாவதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More