Home இலங்கை சுவிஸ்குமார் தப்பிச்செல்ல உதவிய உதவி பொலிஸ் பரிசோதகரை கைது செய்ய பிடியாணை:-

சுவிஸ்குமார் தப்பிச்செல்ல உதவிய உதவி பொலிஸ் பரிசோதகரை கைது செய்ய பிடியாணை:-

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

புங்குடுதீவு மாணவியின் படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியான சுவிஸ்குமார் தப்பிச்சென்றமை தொடர்பான வழக்கில் தலைமறைவாகவுள்ள உதவி பொலிஸ் பரிசோதகரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது யாழ் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதவான் எம்.எம்.றியால் முன்னிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது

இவ்வழக்கில் கைதாகி தற்போது பிணையில் உள்ள வடமாகாண முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மன்றில் முன்னிலையாகியிருந்தார் அத்துடன் இவ்வழக்கில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுவந்த விசாரணைகளின் அறிக்கையினை அரச சட்டவாதி நிசாந்த் இன்று மன்றில் சமர்ப்பித்ததுடன் அது தொடர்பான சட்ட மா அதிபரின் விளக்கத்தினையும் மன்றில் தெரிவித்தார்

இதேவேளை இவ்வழக்கில் முக்கிய சந்தேகநபரும் சம்பவம் இடம்பெற்றவெளை யாழ் பொலிஸ் பிரிவில் உப பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றி தற்போது தலைமறைவாக இருந்துவரும் சிறிகஜன் என்பவரை கைது செய்வதற்கான பிடியாணையினை நீதிபதி இதன்போது பிறப்பித்தார்

ஆத்துடன் அவர் தொடர்பான சகல ஆணவங்களையும் அடையாளத்திற்குட்படுத்தி அவர் நாட்டைவிட்டு தப்பிச்செல்ல முடியாதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினருக்கும் அந்த உத்தரவை அனுப்பிவைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார் இந்த நிலையில்  இவ்வழக்கு வரும் பெப்ரவரிமாதம் 28ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More