Home இலங்கை மடக்கிப் பிடிக்கப்பட்ட இளைஞர் காவற்துறையிடம்..

மடக்கிப் பிடிக்கப்பட்ட இளைஞர் காவற்துறையிடம்..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் நேற்று இரவு மூன்று மோட்டார் சைக்கிளில் இலக்கத் தகடுகளை மறைத்தவாறு வந்து வீதியோரம் நின்ற இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பியோடியோரை ஊர் இளைஞர்கள் விரட்டிப் பிடித்தனர்.

மாங்குளம் சந்தியில் இரவு 9 மணியளவில் வீதியோரம் நின்ற இளைஞர் ஒருவர் மீது 3 மோட்டார் சைக்கிளில் இலக்கத்தகடுகளை துணியால் மறைத்துக்கட்டி வந்து தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பியோடும்போதே இளைஞர்கள் விரட்டிச் சென்று ஒருவரை மடக்கிப்பிடித்தனர். ஏனையவர்கள் தப்பி சென்று மடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞர் சுமார் 23 வயது மதிக்கத்தக்கவர் எனவும் மதுபோதையிலும் காணப்பட்டார். எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் மடக்கிப் பிடிக்கப்பட்டவரின் மோட்டார் சைக்கிள் இலக்கத் தகடுகள் துணிகளால் மூடிக்கட்டப்பட்டு முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. தாக்குதலிற்கு இலக்கானவர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். இதேநேரம் மடக்கிப் பிடிக்கப்பட்ட தாக்குதல்தாரி மற்றும் அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பன மாங்குளம் காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் மாங்குளம் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொற்கொண்டு வருவதோடு தாக்குதல் மேற்கொண்ட ஏனையோரை கைது செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More