Home இலங்கை யாழ்ப்பாணத்தில் பகலில் வீட்டுக் கதவு உடைத்து நகை திருட்டு:-

யாழ்ப்பாணத்தில் பகலில் வீட்டுக் கதவு உடைத்து நகை திருட்டு:-

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-


யாழ்.கலட்டி பகுதியில் பகலில் வீடு உடைத்து 24பவுண் நகைகள் திருடப்பட்டு உள்ளன. கலட்டி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்று உள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வீட்டில் இருந்தவர்கள் காலை வீட்டினை பூட்டி விட்டு தேவாலயத்திற்கு சென்று இருந்த வேளை வீட்டின் பின் கதவை உடைத்து வீட்டினுள் புகுந்த திருடர்கள் வீட்டினுள் சல்லடை போட்டு தேடுதல் நடத்தி 24 பவுண் நகைகளை திருடி சென்று உள்ளனர்.

வீட்டார் தேவலயத்தால் வீடு திரும்பிய போது , வீட்டினுள் இருந்த பொருட்கள் சிதறி கிடப்பதை அவதானித்ததுடன் வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததையும் அவதானித்து உள்ளனர். அதனை அடுத்து தாம் நகைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்த இடத்தினை பார்த்த போது நகைகள் திருடப்பட்டு விட்டதனை அறிந்து கொண்டனர். அதனை தொடர்ந்து சபவம் தொடர்பில் காவற்துறையினருக்கு அறிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவற்துறையினர்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More