Home இலங்கை யாழ்ப்பாணத்தில் களவு..

யாழ்ப்பாணத்தில் களவு..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

யாழ்ப்பாணத்தில் நேற்று (11) பிற்பகல் பேருந்து ஒன்றில் பயணித்த வயதான பெண் ஒருவரிடமிருந்து ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பணம் களவாடப்பட்டுள்ளது. இத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கச்சேரியடியை சேர்ந்த நாகேஸ்வரன் வனிதகுமாரி (வயது 59) என்ற பெண் யாழ்ப்பாணம் கச்சேரியிலிருந்து பேருந்தில் ஏறி தனது இல்லத்துக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

வீட்டினை அண்மித்தவர் தனது பணப்பையினைப் பார்த்தபோது அது திறந்து காணப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பையினுள் தேடியபோது அதில் பணம் எதுவும் இருக்கவில்லை. இது தொடர்பில் உடனடியாகவே பேருந்து உரிமையாளர்களுக்கு கூறப்பட்டு பேருந்து முழுவதும் தேடிப் பார்க்கப்பட்டது.

பேருந்தில் சாரதி ஆசனத்திலிருந்து மூன்றாவது ஆசனத்தில் குறித்த பெண்மணி பயணம் செய்துள்ளார். அதன்போது, குறித்த பெண்ணின் இருக்கைக்கு அருகில் நின்றவர்களில் ஒருவர் பயணிகள் நெரிசலைப் பயன்படுத்தி பையினைத் திறந்து பணத்தினைக் களவாடியிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. இசம்பவம் தொடர்பில் பொலிசில் முறையிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More