Home இந்தியா காதலனை தாக்கி இளம் பெண்ணை வன்புணர்ந்த காவற்துறையிர் கைது:-

காதலனை தாக்கி இளம் பெண்ணை வன்புணர்ந்த காவற்துறையிர் கைது:-

by admin

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காதலனை தாக்கி விட்டு இளம் பெண்ணை இரண்டு காவற்துறை சிப்பாய்கள் வன்புணர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.. ராய்ப்பூரின் விதான் சபா பகுதியில் 20 வயது இளம்பெண் தனது காதலனுடன் மறைவிடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது காவற்துறைக் கடமையில் ஈடுபட்டு இருந்த ஹீராலால் நிர்மல்கர், திகாராம் தாரக் ஆகிய இருவருமே இந்த பாலியல் வன்புணர்வை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இளம் பெண்ணையும், அவரது காதலரையும் தனி இடத்துக்கு அழைத்து சென்று மிரட்டியடீதாடு திகாராம் என்ற காவற்துறைச் சிப்பாய் பெண்ணின் காதலரை தாக்கிய பின்னர் அவர்களை தனி இடத்துக்கு இழுத்து சென்று இரண்டு காவற்துறையினரும் இளம் பெண்ணை வன்புணர்ந்ததாக முறையிடப்பட்டுள்ளது.

இதேவேளை காவற்துறையினர் பெண்ணையும் அவரது காதலரையும் மிரட்டி 15 ஆயிரம் ரூபாவை பறித்தெடுத்ததோடு ஹீராலால் என்ற காவற்துறை சிப்பாய் தொலைபேசி மூலம் பெண்ணிடம் மேலும் 5 ஆயிரம் ரூபா கேட்டு தொந்தரவு செய்து கொண்டிருந்தார்.

இதனையடுத்து பெண், தொலைபேசி உரையாடலைப் பதிவுசெய்த பெண் அதனை ஆதாரமாக வைத்து காவற்துறை உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். இந்த நிலையில் கைதான காவற்துறையினர் இருவரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More